வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்
எம்.ஆர்.அப்பன் அவர்கள் எழுதியது.
மனிதகுழு வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப் பட்ட அவர்களின் மரணத்துக்குப் பின் சீடர்களாலும் எதிரிகளாலும் கேவலமாகத் தூற்றப்பட்டவர்கள் வெகுசிலரே.இத்தனையவர்களில் ஒருவர் கவுதம புத்தர். உலகின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இவர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடு்த்தினர். புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாகப் புத்தரைப் குறிப்பிட்டனர். இதேபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப் பட்டார்.ஆனால் அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப் பட்டார். ஆனால் அவா மறைந்த உடனேயே அவர் ஒரு வில்லனாகவும் போக்கிரியாகவும் தூற்றபட்டார்.இதற்கு குருஷேவ் தலைமை தாங்கினார்.மக்களின் ஈர்ப்பு சக்தியாக சோஷலிசம் நீடிக்கம் வரை மாபெரும் புரட்சியாளரான ஸ்டாலின் பெயரும் நிலைத்து வாழும்.