மலையேற்றம்(சந்திரா தங்கராஜ்)
மலையேற்றம்(சந்திரா தங்கராஜ்)
மலைகள் ஒன்றையொன்று பின்னி உயரமாக, கரடுகளாக, திசைமாற்றும் பாதைகளாக சுழன்று இருப்பதைப்போல இந்த நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். மனித மனதின் துரோகங்களும், வெறுப்பும், போட்டியும் பொறாமையும், பழி உணர்ச்சியும் ஆபத்து மிகுந்த பள்ளங்கள் என்பதை நாவல் உணர்த்திச் செல்கிறது. அதில் அன்பும், காதலும் காட்டின் நடுவே ஓடும் நீரோடையாக வாழ்தலின் தரிசனத்தைக் காட்டுகிறது. நிலத்திற்கும், மலைக்கும் மாறி மாறிப் பயணிக்கும் ஒவ்வொரு அத்தியாயமும் மனித வாழ்வின் அலைச்சலையும் அதன் இடர்களையும் அசலாக வெளிப்படுத்துகிறது. கரையேற முடியாத துயர் ஆற்றின் மடியில் தத்தளிப்பவனுக்குக் கிடைக்கின்ற மரத்துண்டு இது. இந்த மலையேற்றத்தின்போது நாம் அடைகின்ற உணர்வை எளிதில் இறக்கி வைக்க முடியாது என்றாலும், அதன் உச்சியில் அமர்ந்திருக்கின்ற ஒன்றுக்காகதான் மனித வாழ்வு எல்லாக் காலத்திலும் வேண்டி நிற்கிறது.
மலையேற்றம்(சந்திரா தங்கராஜ்) - Product Reviews
No reviews available

