இறுதி இரவு
இறுதி இரவு
இக்கதைகள் ஓர் உதய எழுத்தாளன் புனைவு வெளியில் பாரம்பரியமாய் நிகழ்த்திப் பார்க்கும் பரிசோதனைகள். இவற்றில் சில புகைமூட்டமான சரித்திரப் பக்கங்களின் இடைவெளிகளை கற்பனையின் தர்க்கத் துகள்களை இட்டு நிரப்புபவை. இன்னும் சில இதிகாசப் பிரதிகளைக் கலைத்துப் போட்டு தொன்மத்தைக் கீறும் எதிர்கதையாடல் முயற்சிகள். மேலும் சில பெண் மனதின் பிரத்யேக, ரகசிய, வசீகர உள்ளறைகளின் கதவிடுக்கு ஒளிக்கசிவைப் பிரதிபலிக்க முனைபவை. நவீன இலக்கியத்தில் அலாதி வாசிப்பின்பத்தின் சாத்தியத்தை இச்சிறுகதைத் தொகுதி மறுவரையறை செய்கிறது.
*
“ஒரு தொடக்க எழுத்தாளனின் முதல் தொகுதி நல்ல வாசிப்புத்தன்மையுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இன்றைய எழுத்தின் மாதிரி என்பதனால் பல வகையிலும் கவனத்துக்குரியது இந்நூல். தனது கதைகளை நிறைகளையும் குறைகளையும் கூர்ந்து நோக்கி தனது வல்லமை என்ன என்று அடையாளம் கண்டு கொண்டு மேலதிக காலடி எடுத்து வைப்பதே சிறந்த எழுத்தாளனின் வழிமுறையாக இருக்கும். வலிமையான ஒரு காலடியோடுதான் சரவணகார்த்திகேயன் நுழைந்திருக்கிறார்.”
- ஜெயமோகன்
இறுதி இரவு - Product Reviews
No reviews available

