சுண்ணாம்பு கேட்ட இசக்கி
சுண்ணாம்பு கேட்ட இசக்கி
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து 2000 ஆரம்பம் வரை தென் மாவட்டங்களில் நாட்டார் வழக்காறுகளையும் தெய்வ வழிபாடுகளையும் நாட்டார்கலை நிகழ்ச்சிகளையும் குறித்து செய்திகள் சேகரிக்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் இந்நூலில் விரிவாக பேசப்படுகின்றன. முக்கியமாக தோல்பாவை கூத்து குறித்த பல செய்திகள் இந்நூலில் வருகின்றன. சுள ஆய்வின்போது மேலானது கீழானது என்று ஒன்றும் இல்லை என்பது புரிந்தது, கள ஆய்வில் கிடைக்கும் அவமானமும் தகவலாகவே எடுத்துக்கொண்டதால் தொடர்ந்து செயல்பட முடிந்தது என்பதை இந்த நூல் சூட்சகமாகக் காட்டுகிறது. நாட்டார் கலைஞரின் தனிப்பட்டதும் நிகழ்ச்சிகளின் போதும் உள்ள பிரச்சனைகள் பற்றிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. இது ஆய்வாளனுக்கு உரிய மொழிநடையில் அமைந்த நூல் அல்ல. எளிமையாக கதை சொல்லிக்கே உரிய பாணியில் அமைந்தது பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட பேட்டியில் நாட்டார் வழக்காற்றியல் கொள்கைகள் கருத்தாக்கங்கள் பற்றிய செய்திகள் உள்ளன
சுண்ணாம்பு கேட்ட இசக்கி - Product Reviews
No reviews available

