முசோலினி(ஒரு பேரழிவுக்காரனின் கதை)
முசோலினி(ஒரு பேரழிவுக்காரனின் கதை)
‘சர்வாதிகாரி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எல்லோரின் நினைவுக்கும் வருபவர் முதலில் ஹிட்லர், அடுத்து முசோலினி. இருபதாம் நூற்றாண்டு கண்ட மிக மோசமான சர்வாதிகாரிகள் இவர்கள் இருவரும். ஹிட்லர் ஜெர்மனியிலும் முசோலினி இத்தாலியிலும் ஒரே காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல, சாதாரண குடும்பத்தில் பிறந்த முசோலினி பள்ளியில் படிக்கும்போதே வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர். அதனால் பள்ளிகள் மாறிக்கொண்டே இருந்தவர். முசோலினி யிடம் இருந்த ஒரே நல்ல பழக்கம் புத்தகங்கள் படிப்பது. அப்படிப்பட்ட முசோலினியின் பிறப்பு முதல் பிரதமராகி சர்வாதிகார ஆட்சி நடத்தி பின் சுட்டுக்கொல்லப்பட்டது வரையான முசோலினி வாழ்க்கையைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனது எப்படி, முசோலினி கைது செய்யப்பட்டு மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, ஹிட்லர் அவரை மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் இத்தாலியின் பிரதமராக்கியது என்பது போன்ற அறியப்படாத பல தகவல்களைத் தருகிறது இந்த நூல். இனி, சர்வாதிகாரி முசோலினி பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்!
முசோலினி(ஒரு பேரழிவுக்காரனின் கதை) - Product Reviews
No reviews available

