மண்டல் குழுப் பரிந்துரை அமலானது எப்படி?

0 reviews  

Author: கி.வீரமணி

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மண்டல் குழுப் பரிந்துரை அமலானது எப்படி?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடைப்பதற்குக் கதவைத் திறந்த பெருமை மண்டல் குழுவையே சாரும்.
"மண்டல் குழு அறிக்கையைச் செயல்படுத்தச் செய்ய வேண்டிய பொறுப்பு திராவிடர் கழகத்திடம் இருக்கிறது" பெரியார் திடலில் மண்டல் பேசியது.
மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளின் எண்ணிக்கை 42; போராட்டங்களின் எண்ணிக்கை 16.
மண்டல்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட 15 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் வரலாற்றை ஆவணமாய் பதிவு செய்திருக்கும் நூல்.
சமூக நீதியை நிலை நிறுத்த குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் இவர்களுடனான தொடர்ச்சியான சந்திப்புப் பட்டியல் நீளுவதை இந்நூலில் காணலாம்.
பாரதிய ஜனதா, மண்டலுக்கு எதிராக கமண்டலத்தை முன்னிறுத்தியதை அம்பலப்படுத்தும் நூல்.
மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழலும், வடபுல பத்திரிகையாளர்களின் கண்ணோட்டமும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
சாதுரியமாகவும், உறுதியுடனும் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திய வி.பி.சிங்கின் வீர வரலாற்றை இந்நூலில் வாசிக்கலாம்.
'சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காக, ஆயிரம் நாற்காலிகளை இழக்கத் தயார்' என்பதைச் செயலில் காட்டிய வி.பி. சிங்கின் வியப்புறு சாதனையை விவரிக்கின்றது இந்நூல்.

மண்டல் குழுப் பரிந்துரை அமலானது எப்படி? - Product Reviews


No reviews available