அவளுக்கு நிலா என்று பெயர்

அவளுக்கு நிலா என்று பெயர்
.தமிழ்க் கவிதைக்குப் புதிய தரிசனங்களைத் தந்து வருகிற இந்த அபூர்வ சிருஷ்டிகர்த்தாவிடமிருந்து எதிர்பாராத ஒரு பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கியத்தின் விசாலங்களையும் வாழ்க்கையின் அகல நிளங்களையும் அளந்து சொல்லும் கட்டுரைகளாக....
கலீல் ஜிப்ரானுடைய மந்திரசொல் மயக்கமும் ஆஸ்கார் ஒயில்டினுடைய சம எடைத் தராசு முள் வாக்கிய அமைப்பும் இவர் நடையழைகாய் நிமிர்கின்றன.
நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லா நமக்கு ரகுமான் திறந்த வைத்துள்ள சாளரங்கள் வளி உலகைப் பார்க்கும் கண்களாய் இல்லை, நம்மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய்த் ததும்புகின்றன.
கவிஞர் சிற்பி