ஆன்மீக பரிகாரங்கள்
ஆன்மீக பரிகாரங்கள்
அஷ்வத்ஷங்கர் தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் பிறந்தவர். தன் இளமை கால கல்வியை சென்னையில் பயின்றவர். இளமை முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை தீர பல ஜோதிடர்களை அணுகியும் பிரச்சனை தீராததால், தானே ஜோதிடம் கற்று பரிஹார ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அஷ்வத்ஷங்கர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் என்ற ஊரில் வாழ்ந்த ஜோதிட சக்ரவர்த்தி திரு.எஸ்.ஆர் வெங்கடசுப்ரமணியன் அய்யர் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தார். அவரிடம் ஜோதிடம் கற்று பரிஹாரங்களையும் அவருடைய வழிகாட்டுதலில் கற்றுணர்ந்தார். தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள சேரன்மஹாதேவி என்ற ஊரில்) "வ்யாதிபாத யோக” மஹிமையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து குருவின் பாராட்டைப் பெற்றார்.
இந்நூலில் திருமணம், இல்வாழ்க்கை, ஆரோக்கியம், செல்வம். கல்வி ஆகியவற்றில் தடை நீங்கி வாழ்வில் வளம் பெற எளிய பரிஹாரங்களை ஜாதக மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார். தாமிரபரணி ஆற்றின் மஹிமையையும் ஆற்றின் கரையிலுள்ள கோவில்களில் செய்யக் கூடிய பரிஹாரங்களைப் பற்றியும் மற்றும் ஒருவர் பிறந்த திதியை கொண்டு பலன் கூறும் முறையும், ராசிகற்களை ஜாதகப்படி நாமே சரியாக தேர்ந்தெடுக்கும் வழி முறைகளையும் விளக்கியிருப்பது ஜோதிட உலகில் ஒரு புது முயற்சியாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் செய்யக் கூடிய காலங்களைப் பற்றியும், தகாத காலங்களில் திருமணம் செய்வதனால் ஏற்படும் பிரச்சனைகளையும், அவை தீர்வதற்குரிய வழிகளை எளிமையாக கூறியுள்ளார். ராதா நட்சத்திரத்தில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய தாமிரபரணி சஹஸ்ரநாமாவளி முழுமையாக தரப்பட்டுள்ளது. ஜாதக விளக்கங்கள் சராசரி மக்களும் படித்து பயன்படும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக பரிகாரங்கள் - Product Reviews
No reviews available

