தே (சி.முருகன்)
தே (சி.முருகன்)
வெக்கை வீசும் கரிசல் பூமியின் புனிதங்களாக கட்டமைக்கப்பட்டுள்ள சமூக அவலங்களை உடைத்து, வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்நாவல்
சிராமத்து வாழ்க்கை என்பது நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பொதுத்தன்மையிலிருந்து விலகி தனித்துவமான அடையாளத்தைக் கொண்டது. பல்வேறு வித்தியாசமான கலாசார பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டது. அணிந்திருக்கும் ஆபரணங்கள், உடைகள், உணவுகள், பண்டிகை, கொண்டாட்டங்கள், பேச்சுக்கள் என்று இடத்திற்கு இடம் வெவ்வேறானவை. அவைகளே அவர்களின் பரம்பரை வாழ்வியல் முறைகள்.
ஜாதிய ஏற்றத்தாழ்வுகள். சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், விவசாயம், கண்மாய்கள், மீன்பிடி முறைகள். கேலிகள், கிண்டல்களினூடே... மழையை மட்டுமே நம்பி வாழும் வெக்கரித்த கந்தக பூமியான கரிசல் பிரதேச மக்களின் அச்சு அசலான கிராமிய வாழ்வைச் சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர் சி.முருகன்.
தான் ஒரு பொறுப்புமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதை வெளிக்காட்டாமல் தலைப்பா, தார்ப்பாச்சல், மண்வெட்டி கூடையுடன் நாவல் முழுவதும் நம்முடன் நிற்கிறார். அதுவே 'தே' நாவலை ஒரு வீரியமிக்க படைப்பாக நம்முன் நிறுத்துகிறது.
சோ.தர்மன்
(சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்)
தே (சி.முருகன்) - Product Reviews
No reviews available

