சோரகவி மரபு
சோரகவி மரபு
பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகள், நவீன இலக்கியப் பதிப்புகள் பற்றிய நுட்பமான கட்டுரைகளை ஒருபகுதியாகவும் இலக்கியத் திருட்டு தொடர்பானவற்றை இன்னொரு பகுதியாகவும் கொண்ட நூல் இது. துறைசார் வல்லுநர்கள் மட்டுமல்லாது இலக்கிய வாசகர்களும் அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களும் பார்வைகளும் இதில் உள்ளன. அறிவுப்புலம் சார்ந்த கட்டுரைகளைச் சுவையான மொழியில் எழுத முடியும் என்பதற்குச் சான்று இந்நூல்.
‘முன்முடிவின்றி எதையும் அணுகுதல், எதிராளிக்கு வசதியான இடம் தருதல், சொல்ல வரும் செய்தியை ஆராய்ந்து பிறகு பேசுதல் போன்ற அருங்குணங்கள் கொண்டவர் பெருமாள்முருகன். அதனாலேயே எண்ணெய் ஊற்றப்பட்ட கண்ணாடித் தரையில் நடக்கும்படியான கவனம் தேவைப்படும் இந்தக் கட்டுரைகளைப் பெருமாள்முருகனால் எழுத முடிந்திருக்கிறது’ என்று பழ. அதியமான் இந்நூல் அணிந்துரையில் குறிப்பிடுகிறார்.
சோரகவி மரபு - Product Reviews
No reviews available

