சென்னகரம்பட்டி கொலை வழக்கு

சென்னகரம்பட்டி கொலை வழக்கு
சென்னகரம்பட்டி கொலைவழக்கினை அரசும் காவல்துறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுக்கும் இடையிலான தொலைவு ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஒடும்பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ, பட்டபகலில் ஒடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. சென்னகரம்பட்டி கொலை நிகழ்ந்த நூறு மீட்டர் தொலைவில் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் மேலவளவு கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டி கொலையை செய்த அதே கள்ளர் இனத்தை சார்ந்தவர்களே மேலவளவு கொலையையும் செய்திருக்கிறார்கள். இரண்டு கொலைகளுமே இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது. அரசின் மெத்தனப்போக்கையும் காவல்துறை, நீதித்துறை போன்றவற்றில் சாதியமனோபாவத்தை புரிந்து கொண்டும் சென்னகரம்பட்டி கொலையில் உற்சாகம் அடைந்த கள்ளர்கள் சென்னகரம்பட்டி கொலை நடந்த அதே முறையில் மேலவளவு கொலையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்