சாட்லா
சாட்லா
மண்ணின் மணத்துடனான நிலவெளியில் பல்லாண்டுகளாக வாழ்கிற மக்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள் வழிபாடு, வேளாண்மை, சாதிய ஏற்றத்தாழ்வு, உணவு, அன்றாட நடைமுறைகள், இயற்கைச்சூழல் போன்றவற்றை அவதானித்துக் கதைகளாக்குவது இனவரைவியல் கதைசொல்லல் அணுகுமுறையாகும். கொங்கு வட்டாரத்தில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டார நிலவெளியில் அன்றாடம் அவதானித்த கிராமத்துத் தெருக்கள், மனிதர்கள் என்று விரிந்திடும் பரந்துபட்ட அனுபவங்களைப் சத்தியப்பெருமாள் பாலுச்சாமி புனைகதைகளாக்கியுள்ளார். உலகமயமாக்கலின் விளைவாக நுகர்பொருள் பண்பாடு மேலாதிக்கம் செலுத்துகின்ற இன்றைய காலகட்டத்தில் இனவரைவியல் சார்ந்த வாழ்க்கையைக் கதைகளாக்குவதில் சத்தியப்பெருமாளின் கதைசொல்லல, தனித்து விளங்குகிறது.
வெறுமனே பொழுதுபோக்கு என்பதற்கு அப்பால் நாம் வாழ்கின்ற நடப்புச் சமூக வாழ்க்கைக்கும் கதைகளுக்கும் என்னவகையான உறவு நிலவுகிறது என்ற அடிப்படையான கேள்வியைச் சத்தியப் பெருமாள் எழுப்புகின்றார். அவர், நினைவுகளின் வழியாகக் கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களைக் கதைகளாக்கியுள்ளாக்கியதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது.
ந. முருகேசபாண்டியன்
சாட்லா - Product Reviews
No reviews available

