புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள்
புதுமைப்பித்தனின் சென்னை கதைகள் தனித்துவம் மிக்கவை. அவர் சென்னைக்கு வந்து பத்திரிகைகளில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் எழுதிய கதைகள் இவை.
பெரும்பான்மையான கதைகளில் பிராட்வே. மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி கடற்கரை, பூக்கடை ஆகிய இடங்கள் இடம்பெறுகின்றன. அந்தக் காலத்துச் சென்னை நகரத்தின் தெருக்களையும், மனிதர்களையும், அதன் பரபரப்பையும் புதுமைப்பித்தன் தம் கதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
அவருடைய கதைகளில் மனைவியின் பெயர்கமலம் என்றே இடம்பெறுகிறது. சில கதைகளில் வரும் பெண் குழந்தை தினகரி அம்மா என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இப்படியாக புதுமைப்பித்தனும் அவருடைய குடும்பமும் கதை மாந்தர்களாக இடம்பெறும் தருணங்கள். இந்தக் கதைகளுக்குத் தனித்துவமான சுவையைத் தருகின்றன.
சென்னை நகரத்தின் அன்றாட வாழ்க்கையையும், அதன் மனிதர்களையும் புதுமைப்பித்தனின் பார்வையில் காண முடிகிறது. அவர் பார்த்த சென்னையை, அவர் வாழ்ந்த சென்னையை. அவர் எழுதிய சென்னையை இந்தக் கதைகளின் வழியே மீண்டும் பார்க்கிறேன்.
புதுமைப்பித்தன் பார்வையில் சென்னையைப் பார்த்து வியக்கிறேன்.
தமிழ்மகன்
புதுமைப்பித்தன் சென்னைக் கதைகள் - Product Reviews
No reviews available

