ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை
கதைகள் இரண்டு… உணர்வுகள் ஒன்று… காரணம் காதல். கவிதைகள் அறுபது… வாழ்க்கை ஒன்று… காரணம் அனுபவம். காதலோடு கதையையும் அனுபவத்தோடு கவிதையையும் வாசியுங்கள்!
– எழுத்தாளர் இனிதி
‘ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை’ இந்நூலின் ஓரிடத்தில், கண்ணீரை இன்ப துன்பங்களுக்கு பிறக்கும் குழந்தை என உவமிக்கிறார் எழுத்தாளர் ரா. தஞ்சன் அவர்கள். இதைப் போலவே, இப்புத்தகத்தில் இருக்கும் இரண்டு கதையும் அறுபது கவிதைகளும் இன்ப துன்பங்களில் பிறந்து உணர்வுகளைத் தாங்கியபடியே நம் கைகளுக்கும் வந்து சேர்ந்துள்ளது.
– கவிஞர் க.சரண் பாபு
நம் ஒவ்வொருவரின் குடும்ப வாழ்வின் நிகழ்வுகளை, சற்று நினைவுப்படுத்தி வைக்கும்படியான விறுவிறுப்பான 2 கதைகள்…. நேர்மறை சிந்தனையோடு சமூகப் பார்வையும், பொதுநலமும், காதலின் அழகியலும் பரவிக் கிடக்கும் 60 கவிதைகள்…
– அனீஸ் ஃபாத்திமா (இறைவி)
ஒரு மனிதன் இரண்டு கதை அறுபது கவிதை - Product Reviews
No reviews available

