மேகவனம்
மேகவனம்
இந்தச் சமூகத்தின் பொதுப்புத்திகளில் உள்ள நேர்மறை, எதிர்மறை விளைவுகளைப் பற்றித் தெரியாமலேயே வாழ்பவர்கள் பலர். தெரிந்தாலும் அதில் தனக்கென்ன பயனோ அதை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் சிலர். பொதுமைப்படுத்தப்பட்ட நேரெதிரான அன்றாடங்களில் சமூகத்திற்குத் திரும்பக் கிடைப்பது என்ன என்று ஆராய்ந்து அவற்றை அணுகுவதோடு, அதன் தீர்விற்காக சமரசமில்லாமல் குரல் கொடுப்பவர்கள் வெகுசிலர். இதில் எஸ்தர் மூன்றாவதாக வரும் மனிதர்களில் ஒருத்தி. எஸ்தரின் கதாப்பாத்திரங்கள் நம் ஆழ்மனதில் ஒளிந்து கொண்டுள்ள குழந்தைத் தன்மையைக் கொண்டதாக, போராட்டக் குணம் பெற்றதாக, காமத்தைக் கொண்டாடுவதாக, காதலை வழிமொழிவதாக, இயலாமையை நம்பிக்கையாக மாற்றக் கூடியதாக, நெருப்பைப் போன்ற கோபத்தை மழைத்துளியைப் போல வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலோட்டமாகப் படிக்கும் போது தடுப்பிற்காகக் கட்டப்பட்ட பெருஞ்சுவரே வழியை மறித்துக் கொண்டது போலத் தோன்றும். ஆனால் மறுவாசிப்பில் இக்கதைகளின் ஆழம் கண்ணீரும், ஏக்கமும், மகிழ்ச்சியும் ஒன்றாக ஊறும் கிணற்றிற்குள் மிதப்பதைப் போன்ற பேருணர்வைக் கொடுக்கும். நான் கொண்டாடிய இந்த நூலை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
-அம்பிகா குமரன் பதிப்பாசிரியர்
மேகவனம் - Product Reviews
No reviews available

