கனவினைப் போலொரு காலம்

0 reviews  

Author: ஜவஹர்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கனவினைப் போலொரு காலம்

ஜீவகாருண்ய மனநிலையோடு ஒரு மனிதன் சமூகத்தை மூன்றாவது கண்ணில் உற்று நோக்குகையில் கலைஞன் உருவெடுக்கிறான்.
அந்த கலைஞன் தொழிலும் தொழில் நிமித்தமாக சந்தித்து உரசிய மனிதர்கள், உள் வாங்கிய காட்சிகள், பயணங்களினூடே இரவும் பகலுமாக எதிர் கொண்ட நிகழ்வுகளெல்லாம் அனுபவக் களஞ்சியமாக, இரத்தமும் சதையுமான வலிகளோடும், கொண்டாட்டங்களோடும் நுண் சித்திரத்தை எழுத்தினுள்ளில் சமூக ஆவணமாக்கிப் படையல் போட்டிருக்கிறார் புகைப்படக் கவிஞர் ஜவஹர்.ஜி. இவ்வளவு நுட்பமாக சந்தித்த சமூகத்தின் உயிர்நாடி முடிச்சுக்களை கட்டவிழ்த்து ஓவியமாக்கி தரவியலும் என்பதை ஜவஹர். ஜி யின் உள்ளுக்குள்ளிருக்கும் யதார்த்த கலைஞன் உருகவும் உறையவும் வைத்து அசுர பலத்தோடு நிரூபணப்படுத்தி நம்மை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறான்.
ஏன்? புகைப்படக் கலைஞனின் அறியப்படாத வாழ்வின் பக்கங்கள் எள்ளளவும் கலைத்தன்மை சிந்தாமல் வெளிச்சம் போடப்பட்டிருக்கிறது.
ஒரு பண்பாட்டு ஆய்வாளராக, விளிம்புகளை நேசிக்கும் நல்ல மேய்ப்பராக, தன்னைப் பிழிந்து காயப்போடும் சித்தராகவெல்லாம் ஜவஹர்,ஜி உருமாறியிருப்பதை இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் தளங்களில் உணர முடியும். இது நம் இதயத்திற்குள் பத்திரப்படுத்த வேண்டிய நூல்.
டி.அருள் எழிலன்

கனவினைப் போலொரு காலம் - Product Reviews


No reviews available