கம்பன்: காப்பிய நுட்பங்கள்
கம்பன்: காப்பிய நுட்பங்கள்
தமிழில் இராமாயணத்தைப் படைத்த கம்பனின் பெயருடன் சேர்த்தே அது, கம்பராமாயணம் என அழைக்கப்படுகிறது. கம்பனையும் இராமாயணத்தையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டு பெயர்களையும் ஒன்றாக இணைத்தே நாம் போற்றுகிறோம்.
இந்த உலகத்தில் எல்லா வகையான செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அரச பதவியே கிடைத்திருந்தாலும் தேவர் உலகத்தில் உள்ள கற்பகச் சோலையின் நிழலில் இருந்தாலும் இராமனின் கதையைக் கற்றோரைப் போல் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருக்க இயலாது என்று கம்பன் கவிப் பெருமை சொல்லப்பட்டுள்ளது.
கம்பராமாயணம் மட்டுமன்றி சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏர் எழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை உள்ளிட்டவை இவர் இயற்றிய நூல்கள் என்று அறியப்படுகின்றன.
கம்பனின் சொல்லாட்சி, இலக்கிய நுட்பம், தமிழ்ப் பற்று, உயர்ந்த சிந்தனைகள் வெளிப்படும் அவரது படைப்புலகை ஆழமாக அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு வாசகருக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
முகிலை இராசபாண்டியன்
ஐந்து நாவல்கள், ஒரு குறுநாவல், ஒரு சிறுவர் நாவல், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாடகத் தொகுப்புகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் படைத்துள்ளார். சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநராகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கம்பன்: காப்பிய நுட்பங்கள் - Product Reviews
No reviews available

