இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள்

இல்லறத்துக்கு பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள்
எழுத்தகாளர் ஜெகாதாவின் எழுத்து முற்போக்கு மோகம் கொண்டது. இருப்பதை பழிப்பதே முற்போக்கு என்றில்லாமல், நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் – மனித உணர்வுகளையும் பல கோணத்தில் பரிசீலித்து, சமுதாயப் பொறுப்புணர்ந்து, அதன் வளர்ச்சிக்குத் தன் கருத்துக்களால் வலுச்சேர்க்கிற முற்போக்கு மனம் கொண்டவர். சிறுகதை மன்னன் ஜெயகாந்தனை தனது எழுத்துப் பணியின் ஆதர்ஷமாகக் கொண்டு, அவர் எழுத்துக்கள்மீது காதல் கொண்டு, ஜெயகாந்ததாசனாகி, தனது பெயரையே அதன் சுருக்கமாக ஜெகாதா என்று மாற்றிக் கொண்டவர்.
சிறுகதை, நாவல், சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு எ;னறு பல துறைகள் பற்றியும் 95-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி இருக்கிறார்.
‘இல்லறத்துக்குப் பின்பும் இளமையாய் இருக்க எளிய யோகாசனங்கள்’ எனும் இந்நூலில் முக்கிய யோகாசனங்கள் குறித்து எளிய நடையில் தொகுத்தறித்திருக்கிறார் நூலாசிரியர் ஜெகாதா.
ஆண்-பெண் இருபாலருக்கும் பயன்படும் வதையில் அமைந்துள்ளது இந்நூல். இருப்பினும் பெண்களுக்கு மிகவும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிப்பகத்தார்