ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

0 reviews  

Author: கணேசன் (ஐயர்)

Category: ஈழம்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

 ஒரு சமூகத்தின் வரலாற்றுப் பாத்திரத்தின் மிகச் சிறிய செய்திகள்கூட சமூகத்தின் உண்மையான வரலாற்றை, வெளிப்படுத்துவதற்கு பெரும் சான்றாக அமைந்துவிடும், ஈழப்போராட்ட வரலாற்றில் எம் ஒவ்வொருவரிடமும் வரலாற்றின் பதிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த வகையில் ஈழப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப நிலையில் அதனோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட கணேசனது பதிவுகள் வரலாற்றை மீள்பரிசீலனை செய்வதற்கு நேரடி ஆதாரமாக அமைகிறது.

தலைமறைவு இயக்கங்கள் ஊடாகவே ஈழப்போராட்டம் ஆரம்பமாகிறது. இந்த வகையில் ஒவ்வொரு ஈழப் போராளியும் தலைமறைவுப் போராளியாகவே தனது போராட்ட வாழ்வை ஆரம்பிக்கின்றான். பிரபாகரன் - தம்பி, கரிகாலன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டது போன்றே கணேசன் - ஐயர் என்ற பெயரில் தலைமறைவுப் போராளியாக விடுதலைப் புலிகள் அமைப்பை பிரபாகரனோடு ஆரம்பிக்கிறார்.

சிறு வயதில் பெரியார், திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்ட ஐயர், தேசியப் போராட்ட அலை எழுந்தபோது அதனை ஆயுதப் போரட்டமாகத் தலைமை தாங்கியவர்களில் ஒருவர்.

பின்நாட்களில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்ற மாவோயிச அமைப்பின் மத்திய குழுவிலும், பின்னர் தீப்பொறி என்ற அமைப்பின் மத்தியக் குழுவிலும் செயற்பட்ட ஐயர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாற்றைத் தனது சாட்சியாக இந்நூலில் பதிந்துள்ளார்.

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் - Product Reviews


No reviews available