தெய்வத்தைப் புசித்தல்
தெய்வத்தைப் புசித்தல்
தமிழ் நவீனக் கவிதையின் அரிய மொழி.. செல்மா பிரியதர்ஸன். பழைய உதடுகள் புதிய தாபத்தோடு மோதிக்கொள்ளும்போது பிறக்கும், பற்குழிக் காயம்போல வலியும் எரிச்சலுமாக இருக்கின்றன இந்தத் தொகுப்புக் கவிதைகள். நவீனச் சமூகத்தின் பாசாங்குகளுக்கு எதிர்நின்று, அழுத்தமாகப் பற்களைக் கடித்துக்கொண்டு ஒருவன்/ள் சிரிப்பான்/ள் எனில், அந்தச் சத்தமே.. ஆம் சத்தமே செல்மாவின் கவிதைகள். அவை, பூடகமற்ற மொழியில், பாடுபொருளில், அரசியல் சாய்வில், முன்வைக்கும் சமரசமற்ற உரையாடலில் மானுடத்தின் மீது நிபந்தனையற்ற பரிவுகொள்கின்றன; கோபம்கொள்கின்றன. அதேநேரம் கோவைக்கனியை முசுண்டைக்குருத்து மீது சிதறடிக்கிற மழையையும் அருந்தி கிறக்கம்கொள்கின்றன. இது அசலான கவிஞனுக்குரிய உயிர்ப்பான பண்புகளில் ஒன்று. அதனால்தான் இந்தக் கவிதைகள் எழுதப்பட்ட காலத்தைக் காட்டிலும் இன்னும் கூர்மை அடைந்திருக்கின்றன. உண்மை நண்பர்களே.. இதைச் சொல்வதனால் நான் தைரியம் அடைகிறேன்!
-கதிர்பாரதி
தெய்வத்தைப் புசித்தல் - Product Reviews
No reviews available

