சைபர் வில்லன்கள்
சைபர் வில்லன்கள்
விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படாத துறை இல்லை. இந்த விஞ்ஞான வளர்ச்சி மனித குலத்துக்குப் பெரிதும் சாதகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பாதகமும் ஏற்படுகிறது. மின்னணு பணப் பரிவர்த்தனை வந்த பிறகு நினைத்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து வேண்டு மானாலும் பணத்தைப் பெறலாம், அனுப்பலாம் என்ற நிலை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும் இதைப் பயன்படுத்தி உலகமெங்கும் சைபர் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ‘வங்கியில் இருந்து பேசுகிறோம்’, ‘உங்கள் வங்கிக் கணக்கு காலாவதி ஆகப்போகிறது’, ‘உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து கொரியர் வந்திருக்கிறது’ - இதுபோன்ற குரல்கள் செல்போனுக்கு வருவதை சிலர் நம்பி தங்கள் பணத்தை இழக்கிறார்கள். சாதாரண மனிதரின் பயத்தை, பதற்றத்தைப் பயன்படுத்தி சைபர் மோசடிகள் தொடந்து நடந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சைபர் மோசடிகள் எப்படி நடக்கின்றன, அவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை விளக்கி ஆனந்த விகடனில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். சைபர் மோசடிகளை அறிந்துகொள்ளுங்கள், அலர்ட்டாக இருங்கள்!
சைபர் வில்லன்கள் - Product Reviews
No reviews available

