சித்திரமாடம்(பாலகணேஷ்)
சித்திரமாடம்(பாலகணேஷ்)
பாலகணேஷ் தொழில் முறைப் புத்தக வடிவமைப்பாளர். எழுதுவது ஆர்வத்தின் காரணமாக 2011ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இதுவரை 16 நூல்கள் வெளியிட்டிருக்கிறார். நகைச்சுவை எழுத்தாளர் என்பது இவரது அடையாளம்.
சரித்திர நாவல் என்கிற வகைமையில் இவரது முதல் நாவல் இது.
விளையாட்டு வினையாகும் என்றொரு சொற்றொடர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்குக் கைகண்ட இப்போது உங்கள் கைகளில் தவழும் இந்தப் புத்தகம். உதாரணம்
ஒரு சந்திப்பின்போது விளையாட்டாக நான் ஒரு சரித்திரக் கதைக்கான சுருவை என் இனிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மாவிடம் சொல்லப் போக, அது சிறப்பாக இருக்கிறது என்றும் எழுதும்படியும் அவர் என்னைத் தூண்ட, அது இப்போது 'வினை' (செயல்) ஆகியிருக்கிறது.
யானை மீதமர்ந்து போரிட்ட சமயம் இறந்ததால் 'யானைமேல் துஞ்சிய தேவர்' என்று சோழர் ராஜாதித்யனை அழைப்பார்கள். அதுபோல 'சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்' என்றொரு பாண்டிய மன்னனின் பெயரைக் கேள்விப்பட்டு ஆராய்ந்ததில் சித்திரமாடம் என்பது இன்னதென்று உணர்ந்தேன். அங்கே கொலையானால் வஞ்சகம்தான் காரணமாக இருக்கும் என்பதும் உறுதியாயிற்று. அதைத் தொடர்ந்த சிந்தனையின் விரிவு இந்நாவலாயிற்று. இனி, இது உங்களுடையது.
சித்திரமாடம்(பாலகணேஷ்) - Product Reviews
No reviews available

