அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு
அத்திப்பாக்கம் அ.வெங்கடாகலளார் (1800-1897) பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக இருந்திருக்கிறார். ஏழை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அவர்களது மண்ணை மீண்டும் அவர்கள் பெறுவதற்கான போராட்டமாக தனது வாழ்ககையைக் கட்டமைத்து வாழ்ந்திருக்கிறார். இதற்கென அவர் உருவாக்கிய ஆவணம்தான், பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகி யிருக்கிற விவாதம் எனும் நூல். இச்சிக்கல் தொடர்பான பல்வேறு நடைமுறை நிகழ்வுகளைத் 'தத்துவ விவேசினி' இதழிலும் எழுதினார்.
அப்பாவி ஏழை மக்கள் இந்து மதம் போதிக்கும் ஆசாரங்களுக்கும் அடிமையாகி, பிறந்தது முதல் இறக்கும் வரை நூற்றுக்கணக்கான சடங்குகளைச் செய்து தம் செல்வத்தை வீணடிக்கிறார்கள் என்பது. இவரது வாதம் இதனைத் தடுப்பதற்காக 'இந்துமத ஆசார ஆபாச தரிசினி' எனும் செய்யுள் நூலை எழுதினார். இவை அனைத்தும் இந்திரட்டில் இடம் பெற்றுள்ளன.