விஜய் மில்டன் கவிதைகள்
விஜய் மில்டன் கவிதைகள்
எதைப் பற்றியும் கவிதை எழுதலாம். ஆனால் காதலைப் பற்றி காதலிகளைப் பற்றி எழுதும்போது வார்த்தைகளுக்குக் கூடுதல் அழகும் அர்த்தமும் சேர்ந்துவிடுகின்றன. காதல் எண்ணம் துளிர்விடும்போதே கவிதை மனமும் துளிர்த்துவிடுகிறது. மனித உணர்வுகளின் உச்சம் காதல் என்பதைப் போல மொழியின் உச்சம் கவிதை. காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் சுகானுபவம். பூவில் இருந்து தேனெடுக்கும் வண்டைப்போல காதல் உணர்வுகளில் இருந்து சொற்களை எடுத்திருக்கிறார் விஜய் மில்டன். கொலுசுகள் இடும் சத்தம் வார்த்தை வடிவம் பெற்றும் பேச்சுகளாக அவருக்கு கேட்டிருக்கின்றன. ஓர் இயக்குநராக ஒளிப்பதிவாளராக தயாரிப்பாளராக இருந்தாலும், கவிஞராகவும் தன்னை நிறுவிக்காட்டி இருக்கிறார். அதை இந்தத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது. கொலுசுகள் பேசியதை விஜய் மில்டன் கேட்டு விட்டார். இனி நீங்களும் கேளுங்கள்!
விஜய் மில்டன் கவிதைகள் - Product Reviews
No reviews available

