உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்

உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்
அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியது. மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனினுக்குப் பிந்திய மார்க்சியர்கள் வழங்கியுள்ள கொடைகள் ,அமைப்பியல் -பின் அமைப்பியல் முதலான சிந்தனைகள் விரிவாக்கித் தந்துள்ள சாத்தியப்பாடுகள் ஆகியவற்றை எல்லாம் உள்வாங்கி இலக்கியப் பிரதிகளை அணுகுவதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டும் இக்கட்டுரைகள் தூலமான பிரதியியல் ஆய்வுகளாக விளக்குவதன் மூலம் இலக்கிய அணுகுமுறைக்குச் வான்றுகளாகவும் விளங்குகின்றன.80களின் இறுதியிலும் 96இன் முற்பாதியிலும் வெளியாகிமிபுந்த சர்ச்சைகளுக்கும் ,விவாதங்களுக்கும்,வரவேற்பிற்கும் உள்ளான மார்க்ஸியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், உடைபடும் மெளனங்கள் , உடைபடும் புனிதங்கள் ஆகிய மூன்று நூற்களின் பெருந் தொகுப்பு இது.மனக்கு முந்திய மார்க்சிய இலக்கிய விமர்சகர்களைப் போல இலக்கிய நவீனத்துவத்தை மறுத்தொதுக்காமல் ,அமைப்பியல் ஆகியவற்றின் பெயரால் புதிய விளக்கங்கள் அளித்து பழைய இலக்கியத் திருஉரு வழிபாட்டைத் தொடராமலும் பல இலக்கியப் புனிதங்களை அ.மார்க்ஸ் கட்டவிழ்க்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.