சுந்தர காண்டம் விகடன் (இந்திரா செளந்திர்ராஜன்)

சுந்தர காண்டம் விகடன் (இந்திரா செளந்திர்ராஜன்)
பன்முக எழுத்தாளரான இந்திரா சௌந்தர்ராஜன் 500 சிறுகதைகள், 150-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது பட்டியலில் இந்த 'சுந்தர காண்டம்' ஒரு மாறுபட்ட ஆண்மிக முயற்சி.
ஆன்மிக மர்மங்களில் ஆவல் கொண்டு இவர் எழுதிய கோட்டைப்புரத்து வீடு, ரகசியமாக ஒரு ரகசியம், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற நாவல்கள் தொலைக்காட்சியிலும் மிகப் பிரபலம்.
கிருஷ்ணதாசி, என் பெயர் ரங்கநாயகி, ஆசை நெசவு போன்ற சமூக புதினங்களிலும் பெயர் பெற்ற இவர் இலக்கியச்சிந்தனை விருது மற்றும் தமிழக அரசின் பரிசையும் பெற்றவர்.
இப்போது மதுரையில் வசிக்கும் இவர் சேலத்தில் பிறந்து வளர்ந்தவர். டி.வி.எஸ். நிறுவனங்களில் ஒன்றான 'சுந்தரம் பாஸனர்ஸ்' நிறுவனத்தின் குடும்ப இதழுக்கு ஆசிரியராகவும் இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளாகிவிட்டது. இவரது வெள்ளிவிழா படைப்புகளில் ஒன்றுதான் இந்த சுந்தர காண்டம்!