சிவவாக்கியர் பாடல் (பாட்டும் பொருளும்)

0 reviews  

Author: புலவர் ந.இராசமனோகரன்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  400.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிவவாக்கியர் பாடல் (பாட்டும் பொருளும்)

சிவவாக்கியர் பாடல்கள் ஆன்மிகத்தின் உச்சக்கட்ட ரகசியத்தைப் பேசும் பாடல் -
"ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாள்களும் கழிந்துபோய்..."
என்று தொடங்கும் பாடலாகும். இறைவனைத் தேடி அலையும் மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கும் அங்கும் "ஓடி ஓடி" அலைகிறார்கள்; தேடுகிறார்கள். அப்படி வெளியுலகில் இறைவனைத் தேடி தேடி ("நாடி நாடி"), மனிதர்களின் வாழ்நாள்கள் வீணாகக் கழிந்து போகின்றனவே தவிர, அவர்களைப் படைத்த பரம்பொருளை அவர்களால் காண முடிவதில்லை. இறுதியில், இறைவனைக் காண முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மனமும் உடலும் "வாடி வாடி" மடிந்து போகும் மனிதர்களது எண்ணிக்கை இந்த உலகத்தில் "கோடி கோடி" ஆகும். கண்ணாடியைத் துடைக்காமல் முகத்தைப் பார்க்க முடியாது என்பதை போல, மனிதன் தன் மனத்தைத் தூய்மைப்படுத்தி தனக்குள்ளே நோக்கினால் மட்டுமே அந்தச் சோதியைக் காண முடியும். அதனை விடுத்து, வெளியுலகில் ஓடி ஓடித் தேடுவது அறியாமை என்பதை இப்பாடல் மிக ஆவேசமாகவும், ஆதங்கத்தோடும் உணர்த்துகிறது. சுருக்கமாக சொன்னால், "வெளியே தேடாதே, உனக்குள்ளே தேடு; இல்லையெனில் உன் வாழ்நாள் வீணாகிவிடும்" என்று எச்சரிக்கும் மிகச் சிறந்த தத்துவப் பாடல் இதுவாகும். சிவவாக்கியர் சித்தர் பாடல்கள் எளிய தமிழில், அதே சமயம் ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களைக் கொண்டவை. சாதி, மதப் பிரிவினைகளை கடுமையாக சாடும் இவர் உருவ வழிபாட்டை விட, அக வழிபாடே (மனத்திற்குள் இறைவனைக் காண்பது) சிறந்தது என்று வலியுறுத்துகிறார். போலிச் சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறார். "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார். இவரது பாடல்கள் "சிவவாக்கியம்" என்று அழைக்கப்படுகின்றன. எளிய சொற்களில் மிகக் கடுமையான உண்மைகளைப் புகட்டுவது இவரது தனிச்சிறப்பாகும்.

சிவவாக்கியர் பாடல் (பாட்டும் பொருளும்) - Product Reviews


No reviews available