செந்தட்டி
செந்தட்டி
இந்த நாவலில் வரும் மனிதர்களைப் பற்றி எழுதும்போது வாழ்வியல் ரீதியாகவோ, உறவு முறையிலேயோ தவறான தகவலோ, பிழையோ இருந்திடக் கூடாது என்பதில் சக்தி மிகச் ஜாக்கிரதையாக இருந்துள்ளதை பல இடங்களில் கவனிக்க முடிந்தது. காரணம் அவர் தொட்டுள்ள பகுதி மின்சாரம் பாயும் கம்பியைப் போன்றது கொஞ்சம் கவனம் சிதறினாலும் அதுவே பெரும் சிக்கலைக் கொண்டுபோய் நிறுத்திவிடும். இந்த நாவலை வாசிக்கும் பலரும் சக்தியின் நுட்பமான கதையாடலை கவனிக்க முடியும். மறவர் சமூகத்திற்குள் இருக்கும் சாதிய கட்டமைப்பு, கிளைகள் அதற்குள் இருக்கும் பிரிவுகள் உறவு முறைகளும் எதிர் உறவு முறைகளும் கரிசல் மண் எவ்வளவு சிக்கலை தினசரி சத்திக்கும் என்பதை நாவலை வாசிக்கும்போது கவனிக்கலாம். திரைப்படத்தைப் பார்ப்பதுபோல வேகமான நடையில் அந்நிலத்தின் மனித வாழ்வை பேசுகிறது.
-அ.கரீம்
செந்தட்டி - Product Reviews
No reviews available

