பிரேத மனிதன்
Author: மேரி ஷெல்லி ; தமிழில் : புதுமைப்பித்தன்
Category: புதினங்கள்
Available - Shipped in 5-6 business days
பிரேத மனிதன்
ஆதாமைப்போல நானும் இந்த உலகத்தில் வேறு எந்த ஜீவராசிகளுடனும் தொடர்பு கொண்டவனல்ல போலும், ஆனால் அவனுடைய நிலை என்னுடையதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. அவன், கடவுளின் கரங்களிலிருந்து வந்த பொழுது பூர்ண வடிவம் படைத்து மகிழ்ச்சியும் சுபிக்ஷமும் பெற்ற ஒருவனாகக் கடவுளின் பராமரிப்பிலே பாதுகாப்பிலே வாழ்ந்து வந்தான். தனக்கும் மேம்பாடுடைய ஒரு தேஜஸ்வியுடன் நேருக்கு நேராகப் பேச மனிதனுக்கு அப்பொழுது சவுகரியம் வாய்த்திருந்தது; ஆனால் நானோ தன்னந்தனியாக நிர்க்கதியாகத் துன்பத்தில் நெளிந்தேன். சாத்தான்தான் என்னுடைய நிலைமையைப் பூர்ணமாகக் காட்டுவதற்கு லாயக்கு உள்ளவன் என்று பலமுறை நான் நினைத்தது உண்டு.
பிரேத மனிதன் - Product Reviews
No reviews available

