நிலமாடிய பொழுது நாடகங்கள்
நிலமாடிய பொழுது நாடகங்கள்
"ஒரே மூலம், ஒரே விதை, பாத்திரங்கள் வேறு, நிலங்கள் வேறு"
பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் மனித இனம் இன்று தன்னைத் தானே மென்று தின்று கொண்டிருக்கிறது. நிறம், சாதி, மதம், இனம், வர்க்கம் என ஏதோ ஒன்று அரித்துக்கொண்டே இருக்கிறது. மனிதனின் அறிவு இந்த பேதங்களின் முன் தோற்றுக்கொண்டே இருக்கிறது. இந்த தோல்விகளுக்கு யார் காரணம்? ஒருவனா? ஒருத்தியா? ஒரு குடும்பமா? ஒரு இனமா? ஒரு நாடா? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். யாரும் நான்தான் குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளப் போவதில்லை. தத்துவார்த்தமாக சொல்லப்போனால் யாரும் குற்றவாளி அல்ல. அந்தந்த நேரத்து நியாயங்கள் என்று மட்டுமே ஒன்று உண்டு. நாம் இதனை ஏற்க வேண்டும் அல்லது அழுகை எனும் மெளிணிப்பாடு என்ற நாடகத்தில் வரும் அழுகைகள் போல யாரோ அழுகிறார்கள் என நினைத்துக்கொண்டு, நமக்கு நாமே அழுதுகொள்ள வேண்டியதுதான். அப்படியானால் இதற்கான ஆறுதல்தான் என்ன என்று கேட்டால், அகமாய் புறமாய் நமக்குள் இருக்கும் குப்பையை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று முடிகிறது, யார் குற்றவாளி என்கிற இந்த நாடகம்.
மொத்தம் ஆறு நாடகங்கள். ஒவ்வொன்றும் தனித்தனி. ஆனால் எல்லாமே ஒரே கோட்பாட்டில் இணைகின்றன. அந்தக் கோட்பாட்டின் பெயர் அறம்.
நிலமாடிய பொழுது நாடகங்கள் - Product Reviews
No reviews available

