மரணமும் ஜோதிடமும் ஜோதிட ஆய்வு நூல் (CRB Method)
மரணமும் ஜோதிடமும் ஜோதிட ஆய்வு நூல் (CRB Method)
இந்நூலின் ஆசிரியர் திரு C. ராஜன் பாபு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் திரு .சந்திரன், திருமதி ராஜாமணி தம்பதிக்கு 28.09.1973 அன்று பிறந்துள்ளார். விலங்கியல் துறையில் M.Sc., பட்டம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு அரசு பணியில் மருத்துவத்துறையில் உதவியாளராகவும். பின்னர் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகவும் பணியாற்றி தன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
ஜோதிட பலன்களை துல்லியமாக கண்டறிய CRS METHOD என்னும் புதிய முறையை தனது ஆய்வுகள் மூலமாக கண்டறிந்துள்ளார். தான் பெரும்பாடு பட்டு கண்டறிந்த உண்மைகளை, ஒளிவு மறைவின்றி ஜோதிட உலகம் பயன்பெறுவதற்காக "மரணமும் ஜோதிடமும் என்னும் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.
CRB முறையில் வதம், வேதை மற்றும் வைணாசிகம் நட்சத்திரங் களில் அமர்கின்ற கிரகங்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன என்ற உண்மையையும் ஒரு கிரகத்தின் மூன்று நட்சத்திரங் களில் அமரும் கிரகங்கள் இணையும் என்பதையும் நூற்றுக்கு மேற்பட்ட உண்மையான ஜாதகங்களில் சுட்டிக்காட்டி உறுதி செய்துள்ளார் என்பதை இந்நூலில் காண முடிகிறது
பொள்ளாச்சி, ஸ்ரீ சுபம் ஜோதிடம், ஜோதிட சிரோன்மணி முனைவர். Dr.B.விஜயகுமார் அவர்கள், பாராட்டி கூறுகையில் எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற குறளுக்கு இணங்க நான் கண்ட மெய்ப்பொருள் தான் C.ராஜன் பாபு அவர்களின் CRB முறையாகும். இவரது புத்தகம் மரணமும் ஜோதிடமும்" ஜோதிட உலகில் பல சூட்சமத்தை கொண்டுள்ள முதல் வெளிப்படையான நூல் ஆரும். வதை, வைணாசிகம், வேதை தீங்கு மட்டுமே செய்யும் என்ற நிலைமாறி, கிரசு இணைவுகளாகவும் பலன் கொடுக்கும் என்பதை, ஜோதிட பிரம்மரிஷி C. ராஜன் பாபு அவர்கள், இந்த ஜோதிட உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார்.
மரணமும் ஜோதிடமும் ஜோதிட ஆய்வு நூல் (CRB Method) - Product Reviews
No reviews available

