மனமே நீ அமைதியாகி விடு
மனமே நீ அமைதியாகி விடு
நூலாசிரியர் பற்றி
சென்னையில் வசிக்கின்ற அ.தி. ராஜ்குமார், மனஆற்றல் மற்றும் தியானம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக போதிக்கும் ஆசிரியர். தனது கருத்தரங்குகள் மற்றும் நூல்களின் வாயிலாக, தனது கற்றல்கள். அன்பு மற்றும் ஞானத்தை அவர் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறார்.
சிறந்த மனைவி, அழகான குழந்தைகள், அற்புதமான பெற்றோர். நேசமிகு சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மிக நல்ல நண்பர்கள் ஆகிய நற்பேறுகள் கிடைத்தமைக்காக ராஜ்குமார் எப்போதும் நன்றி பாராட்டுகிறார். பாடல்களைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், பாடுவதில் வல்லவரும்கூட டென்னிஸ் மற்றும் செஸ் போன்ற விளையாட்டுகளிலும் நாட்டம் கொண்டவர்.
இவர், "மனதில் கொள்" (மைண்ட் இட்) என்ற நூல் வரிசையில் ஏற்கெனவே 4 நூல்களை எழுதி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நூலாசிரியர். இந்நூல்கள் தற்போது புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. இந்த நூல்கள் மிகவும் பிரபலமானவை, அத்துடன் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் ஏராளமான வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளவை. இவரது அனைத்து நூல்களும் விருதுகளை வென்றுள்ளன.
தற்போது உங்களது கரங்களில் தவழும் இந்த நூல், மனித மனத்தின் இயல்பு, எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை எளிய முறையில், அதேவேளையில் ஆழமாகப் புரிந்துகொண்டு. வாசிப்பதற்கு எளிமையான வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல், நமது மனத்தைக் கட்டுப்படுத்துவதில் தேர்ச்சி பெற்று, மனஅழுத்தத்துக்கு ஆளாகாமல், அமைதியான உணர்வுகளோடு, வெற்றியை அடைவதற்கான சில எளிய மற்றும் நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளை வழங்குவதுடன், வாழ்க்கையைத் திறம்பட வாழ்வதற்கும் நமக்கு வழிகாட்டுகிறது.
வெற்றிகரமான, அமைதியான மற்றும் நிறைவான வாழ்க்கையை அனுபவியுங்கள்!
மனமே நீ அமைதியாகி விடு - Product Reviews
No reviews available

