மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி
ஐம்பது ,அறுபது வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நோய்களும் அதற்கான மருந்துகளும் மருத்துவ முறைகளும் வேறு.அவசர கதியில் இன்று ஓடும் ஓட்டமும் மன நிலையும் வேறு.தற்காலத்துக ஏற்றாற்போல் மருத்துவ மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே இன்றைய நிலையை பெண்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.பின்பு குழந்தை நிற்கவில்லையே என்றும் கருச்சிதைவு ஏற்படுகிறது என்றும் வருகிறவர்கள் பலர்.வெள்ளைப்படுதலின் காரணமாக வருகிறவர்கள் 80 சதவீதம் .இதில் திருமணத்துக்கு முன்பிருந்தே இந்த வித பிரச்சனைகள் இருந்தாலும் ,அது சூடு அல்லது குளுமை ஆகிவிட்டது என்று இந்த இரண்டையே காரணமாகச் சொல்லி காலம் தள்ளி விடுகின்றனர். ...இப்படிப்பட்ட நிலை மாற ,Ham.a.Mell.Folli ,Phos ,Puls,riux,Sabina,Actea,a Caulophyll என்ற மருந்துகள் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன.பெண்களுக்கு ,லூகோரியா என்ற வெள்ளைப் படுதல் பிரச்சனை கடும் உபத்திரவத்தை தரக்கூடியது. அதனால் இதை குறிப்பறிந்து தகுந்த ஹோமியோபதி மருந்தை நிர்ணயம் செய்து கொடுத்தல் அவசியம்.சிலருக்கு இந்த வெள்ளைப்படுதல் தண்ணீர் போலவும் இளம் மஞ்சல் நிறமாகவும் ,பச்சை வண்ணத்திலும் இருக்கும் .இவற்றைத் தனித்தனியே கண்காணித்து நிர்ணயம் செய்கிறது ஹோமியோபதி மருத்துவம்.