கூத்துப்பட்டறையும் (தமிழ் நவீன அரங்க உருவாக்கமும்)

0 reviews  

Author: வ.பாஸ்கரன்

Category: ஆய்வுக் கட்டுரை

Available - Shipped in 5-6 business days

Price:  550.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கூத்துப்பட்டறையும் (தமிழ் நவீன அரங்க உருவாக்கமும்)

சிறுகதை எழுத்தாளராக அறிமுகமான ந. முத்துசாமி நாடகங்கள் எழுதத் தொடங்கினார். அவருடைய 'நாற்காலிக்காரர்', 'காலம் காலமாக', 'அப்பாவும் பிள்ளையும்' ஆகிய நாடகங்கள் சிறுபத்திரிகைகளில் பிரசுரமாயின.
சிதறுண்ட முகமிழந்த மனிதர்களை முத்துசாமி தம்முடைய நாடகங்களில் அறிமுகப்படுத்தினார். இந்த நாடகங்களில் தனிப்பட்ட பாத்திரங்கள் இல்லை. கோரஸ் போன்று குறிப்பிட்ட உணர்வு நிலைகளை பாத்திரங்கள் உருவகம் செய்கின்றன. பாத்திரங்கள் மரபான வசனங்களை பேசாமல் உடைந்துபோன வார்த்தைகளில் மனநிலை சித்தரிப்புகளாக மட்டும் வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகமாகின்றன. இந்த நாடகங்களை மேடையேற்ற அதிக பயிற்சி தேவைப்படுகிறது. பாத்திரங்களின் அசைவுகளும் அவர்கள் நாடகவெளியை உபயோகப்படுத்தும் விதமும் அதிக கவனம் பெறுகின்றன. இவை பெரும்பாலும் உணர்வுநிலைகளை சித்தரிப்பதால் பலவிதமான அனுமானம் கொள்ளவும், அர்த்தம் கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன.
இந்நிலையிலேயே பாரம்பரியக் கலைகள் பற்றிய அறிமுகமும், புதிய வெளிப்பாட்டு முறைகளும், உடல்மொழியும் கொண்ட நடிகர்களை உருவாக்கும் நோக்கில் கூத்துப்பட்டறை அமைப்பை துவக்குகிறார்.
நவீன நாடகத்தின் உலகளாவிய வரலாற்றிலிருந்து தொடங்கி கூத்துப்பட்டறை உருவாகி வளர்ந்த விதம் பற்றியும், அங்கு அளிக்கப்பட்ட பன்முக நாடகப் பயிற்சி முறைகள் பற்றியும். நடிகர்களின் நாடகப் பரிமாணங்கள் மற்றும் பங்களிப்புகள் பற்றியும், கூத்துப்பட்டறையின் படைப்பாக்க முயற்சிகள் மற்றும் அரங்க வடிவமைப்பு முறைகள் பற்றியும் விரிவான ஆய்வுக் குறிப்புகளை அளித்துள்ளார் வ. பாஸ்கரன்.
வெளி ரெங்கராஜன்

கூத்துப்பட்டறையும் (தமிழ் நவீன அரங்க உருவாக்கமும்) - Product Reviews


No reviews available