காரப்பொரி
காரப்பொரி
மனிதனை ஒரு விசித்திர ஜீவனாக்கி வேடிக்கை பார்க்கிறது இந்த மதுக்குடுவை. இன்ப துன்பங்களுக்கு இதுதான் உற்ற துணை என குடுவைக்குள் இருக்கும் மதுவினில் நீந்தித் தத்தளிக்கிறார்கள். தங்களது ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் மதுக்குடுவைக்குள் திரவ வடிவில் அடைக்கப்பட்டிருப்பதாகவே அவர்கள் உணர்கிறார்கள்.
இது ஒரு மாபெரும் கொண்டாட்டம். மனிதனின் மனப்பிறழ்வு, அந்தக் கொண்டாட்டத்தை நீட்டிக்க விடுவதில்லை... இப்படியாக திண்டாடுகிற மனிதர்களைத் தனக்கே உரிய எதார்த்த நடையில் சொல்லியிருக்கிறார் வா.மு.கோமு. படைப்பிலக்கியப் பார்வைக்கு காணும் மனிதர்கள் அத்தனையும் கதாப்பாத்திரங்களே என்கிற உண்மையை சாடியிருக்கிறது இந்நாவலின் பாத்திரப்படைப்புகள். இக்கதாப்பாத்திரங்களை நீங்கள் பார்த்திட வேண்டுமா? உங்களது ஊரில் உள்ள சாக்னாக்கடைக்குச் செல்லுங்கள். அங்கே அரசியல் பேசப்படுகிறது, தனி மனிதப் பிரச்சனைகள் பொதுமைப்படுத்தப்படுகிறது. சாதி மத பேதங்கள் அங்கு அறவே இல்லை. குறிப்பாக அங்கு உண்மை பேசப்படுகிறது. இந்நாவலின் கதைக்களம் எதுவாக இருந்தாலும் சாக்னாக்கடை பொதுவானதே.
வா.மு.கோமு
கி.ச.திலீபன்
காரப்பொரி - Product Reviews
No reviews available

