கடந்து நிலைக்கும் காலம்
கடந்து நிலைக்கும் காலம்
இயற்கையில் நிலவும் சமத்துவத்தை மனித சமூகத்திலும் நிலைநாட்ட வேண்டும் என்கிற பொதுவுடைமைப் போராளியின் கனவே அப்பாவின் பாடல்கள் மனிதர்களிடம் காட்டிய அதே பேரன்பைப் பறவைகளிடமும் செடிகொடிகளிடமும் பிரதிபலிக்கும் உயிர்களின் தோழனாய்த் திகழ்ந்தார் மண் சார்ந்த ஆவாரையையும் செம்பருத்தியையும் பாடுபொருளாக்கும்போது அங்கு அவரது பொதுவுடைமைச் சிந்தளையும் மண் சார்ந்த அரசியலும் சமரசமின்றி வெளிப்படுகின்றன. இயற்கை என்பது தனிநபர் சொத்தல்ல, அது அனைவருக்கும் பொதுவான வாழ்வாதாரம் என்ற கொள்கையை முன்வைப்பதன் மூலம் சூழலியலைப் பாதுகாக்க வேண்டிய அறச்சீற்றத்தை உருவாக்குகின்ற அழிவின் விளிம்பில் இருக்கும் நம் நாட்டு மருத்துவத்தையும் இயற்கை வளங்களையும் மீட்டெடுக்கத் தூண்டும் ஒரு கருத்தியல் ஆயுதமாகவே அவரின் பாடங்கள் நிகழ்கின்றன.
அவரின் எளிய குரலில் இருந்த நேர்மையும், இலட்சிய உறுதியும் உழைக்கும் மக்களைப் பெரிதும் ஈர்த்தன யாருக்காக எழுதினாரோ அந்த உழைக்கும் மக்களே அவரது பாடல்களை இதயங்களில் ஏந்திக் கொண்டனர். எந்தவொரு விருதும் தராத மிகப்பெரிய அங்கீகாரத்தை அந்த எளிய மக்கள் அவருக்கு வழங்கினார்கள்.
உடல் நலிவுற்ற காலத்திலும் வறுமையிலும் இயக்கம் தொய்வடைந்த காலத்திலும் அவரது கொள்கை உறுதி குறையவில்லை தன் வாழ்வின் இறுதி மூச்ல அடங்கும் வரை தான் நம்பிய அறத்தின் பாதையிலேயே பயணித்து ஒரு புடமிட்ட கம்யூனிஈ ஆளுமையாகவே மறைந்தார். இத்தகை சமரசமற்ற வாழ்வே அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. எளிய மக்களின் விடிவுக்காகலே பேசினார். எழுதினார். பாடினார். இறுதியில் அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். அவரது மறைவின் போது தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போல மக்கள் ஓலமிட்டு அழுதுகொண்டு ஓடிவந்தனர். அந் எளிய மக்களின் கண்ணீர்த் துளிகளே அவரது நேர்மையான வாழ்க்கைக்குக் கிடைத்த ஆகச் சிறந்த சான்று தன் வாழ்வின் கடைசி நொடி வரை அவர் ஏந்திப் பிடித்த சிவப்புக் கொள்கையே மரணத்திலும் மக்களின் அழியாத அன்பைப் பெற்றுத் தந்தது. இலட்சியத்திற்காக வாழ்ந்த ஒரு போராளியின் வாழ்வு மக்களின் மனங்களில் மரணமற்றதாய் நிலைத்து நிற்கிறது.
தோழர் செங்கொடி (முத்தமகள்!
கடந்து நிலைக்கும் காலம் - Product Reviews
No reviews available

