இருத்திலியம் கோட்பாடும் புனைவும்
இருத்திலியம் கோட்பாடும் புனைவும்
க் ர்க்கெகார்ட் நீட்சே, சார்த்தர் உள்ளிட்ட இருத்தலியவாதிகளின் வேறுபட்ட விளக்கங்களையும், அவற்றில் காணப்படும் ஒத்த கருத்துகளையும் ஒருசேர அறிமுகப்படுத்தியதற்கடுத்து, இருத்தலியத்தின் அடிப்படைகளான தனிமனித முக்கியத்துவம். தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம், இறை ஏற்பும் மறுப்பும், அபத்தம். எல்லைக்கோட்டு நிலை ஆகியவற்றை ஆதவன், சுந்தர ராமசாமி. சம்பத் முதலான தமிழின் முன்னோடி நாவலாசிரியர்களின் தெரிவு செய்யப்பட்ட இருபது நாவல்களில் பொருந்த ஆய்வு செய்கிறது இந்நூல். எடுத்துக்கொண்ட எல்லாச் சட்டகங்களையும் வாய்பாடு போல, தான் ஆய்வுக்குட்படுத்தும் அனைத்து நாவல்களிலும் பொருத்திக்காட்டாது. சாத்தியமுள்ளவற்றை அவை அகப்படும் இடங்களை மட்டும் எடுத்துக்காட்டிப் பேசியுள்ளமை இந்நூலின் முன்மாதிரி அணுகுமுறை
க.நா.சு.வின் நாவல்களை ஆத்திக இருத்தலியப் புதினங்கள் என்று கூறுவது உள்ளிட்ட சுவாரசியமான முடிவுகள் இடம்பெறும் இந்நூலில், 'தமிழ்ப் புதினப் பரப்பில் அதிகமான இருத்தலியக் கூறுகளைக் கொண்ட, அதிகப் புதினங்களைப் படைத்துள்ளவராக இந்திரா பார்த்தசாரதியைக் கருதலாம் என்றாலும், முழுமையான இருத்தலிய மாந்தரையோ; இருத்தலியப் புதினத்தையோ படைப்பதில் ஓரளவே அவர் வெற்றி பெற்றுள்ளார்' போன்ற நுட்பமான விமரிசனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. தமது ஆய்வுவெளியாகக் கைக்கொண்ட ஒரு கோட்பாட்டைத் தலையில் வைத்துக் கொண்டாடாமலும் அதேசமயம் கீழே போட்டு உடைக்காமலும் நிதானமறிந்தே இந்நூல் பயணித்துள்ளது. தத்துவத்தில் பதில்களைவிடக் கேள்விகளே அர்த்தப்பூர்வமானவை என்ற முக்கியமான விடயத்தை முன்வைக்கும் மு. சீமானம்பலம், இருத்தலியம் எழுப்பியக் கேள்விகளுக்கு எப்போதும் ஒரு தேவை இருந்தபடிதான் இருக்கிறது என்கிறார். அந்தவகையில் இந்நூலின் மறுபதிப்பும் வாசகர்களுக்கு உற்சாகம் தரக்கூடியதே.
றாம் சந்தோஷ் வடார்க்காடு
இருத்திலியம் கோட்பாடும் புனைவும் - Product Reviews
No reviews available

