இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்!
இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்!
நியாயத்துக்காகப் போராடுவது பெரியாரின் குணம். அலுப்பு சலிப்பில்லாமல் உழைப்பது அவருடைய இயல்பு. ஒரு வீண் செலவு இல்லாமல் காசுகாசாய்ச் சேர்த்து, கல்விக்கும் இதர அறப்பணிகளுக்கும் லட்சம் லட்சமாய்க் கொடுப்பது அவரது பெருஞ் சிறப்பு.
பெரியார் தனி ஒரு கட்சிக்கு உரியவர் அல்லர். அவர் எல்லாக் கட்சிகளுக்கும் உரியவர். அவர் உலகப் பெரியார், உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தில் புது யுகத்தைத் தொடங்கி வைத்தவர் என்று வருங்கால வரலாறு அவரைப் போற்றும்.
நேற்றும் - இன்றும் பெரியார், புரட்சிக் கருத்துகள் மலரும் பூங்காவாக இருக்கிறார். வெறும் மணம் மட்டும் தரும் மலர் அவரிடம் மலர்வதில்லை; மருத்துவத்திற்குப் பயன்படும் மலர்களே அவரிடம் மலரும்!
சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவார்; இல்லாத ஒப்பனைகள் செய்யப்படும் படமல்ல அவர் படம்; உள்ளுறுப்புகளை எடுத்துக் காட்டும் 'எக்ஸ்ரே' படம் அது!
இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்! - Product Reviews
No reviews available

