கோபிகைகளும் ஜாங்கிரிகளும்

கோபிகைகளும் ஜாங்கிரிகளும்
ஜே.எஸ்.ராகவன் அவர்கள் எழுதியது. நதம் செல்லும் இடங்களிலெல்லாம் பின்னால் வந்து நோட்டம் போடுகிறாரோ? நாம் செய்யம் அச்சுபிச்சுத் தனங்களை எல்லாம் ரகசிய வெப் கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கிறாரோ? சாப்பிடும் போதெல்லாம் நான் சட்டையில் சாம்பாரைக் கொட்டிக் கொள்ளும் விஷயம் இந்த ஆளுக்கு எப்படித் தெரியும்? கண்டிப்பாக ஜே.எஸ் ராகவன் மீது இப்படி ஒரு சந்தேகம் எல்லோருக்கும் வந்தே தீரும். வெகு ஜன மக்களின் நடவடிக்கைகளில் இருந்து இயல்பாக நகைச்சுவையை மட்டும் பிரித்து எடுத்து எழுதுவதில் காமெடி அன்னபட்சி இவர். கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த பூச்சி முதல் கம்ப்யூட்டரை கந்தரக்கோலம் பண்ணும் வைரஸ் வரை எதையும் ஹாஸ்ய கோணத்தில் மட்டும் அணுகுவதில் இவரை மிஞ்ச இவரால் மட்டுமே முடியும்.நகைச்சுவையால் சர்வாதிகாரம் செய்துவரம் ஹிஹி..ட்லர் ஜே.எஸ்.ராகவனின் 8ஆவது நகைச்சுவைத் தொகுப்பு இது.