தர்பாரி ராகம்
Author: ஶ்ரீலால் சுக்லா ; தமிழாக்கம் : சரஸ்வதி ராம்னாத்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
தர்பாரி ராகம்
ஒரு கிராமம் போன்ற ஊரிலும், பெரிய நகரங்களையும் தலை நகரங்களையும் போலவே, கிராமிய வாழ்வின் சந்தடிகளும், குழப்பங்களும், இனம், சாதி ஆகியவற்றின் பாதிப்புகளும் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றிலிருந்து தப்ப முடியவில்லை. அரசியல் அமைப்பானது எத்தகைய புதிய மன இயல்புகளைத் தோற்றுவித்து வளர்த்துக் கொண்டு வருகிறதோ, அவை பல்வேறு மட்டங்களிலும் புதியதொரு பிரபுத்துவ முறையின் செயற்பாட்டை மலரச் செய்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் தர்பாரி ராகம் நாவலில் உள்ள கிண்டலும், அங்கதமும், அமானுஷ்யமானது மட்டுமல்ல; அசிங்கமான, குரூரமான, சகிக்க முடியாத செயல்முறையைக் கடுமையாகத் தாக்கி விமர்சிக்கின்றன. நமது சமூகத்தின் அயோக்கியத்தனம், மோசடி, நாணயமற்ற போக்கு, சூழ்ச்சி, தகிடு தத்தங்களை அப்பட்டமாகக் காட்டும் நேர்மையான முயற்சி இது.
ஸ்ரீலால் சுக்லா (1925-2011) புதிய தலைமுறை இந்தி எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய சமூகத்தில் வீழ்ச்சியடைந்து வரும் ஒழுக்க விழுமியங்களை சுக்லா தனது நாவல்கள் மூலம் எடுத்துரைத்தவர். அவரது எழுத்துகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவின் எதிர்மறை அம்சங்களை நையாண்டி முறையில் அம்பலப்படுத்துகின்றன. தர்பாரி ராகம் அவரது சிறந்த படைப்பு; சாகித்ய அகாதமி விருது பெற்றது.
தர்பாரி ராகம் - Product Reviews
No reviews available

