சித்ரபவுரி
சித்ரபவுரி
முபீன்சாதிகாஓர் அபூர்வமான எழுத்தாளர். அபூர்வம் என்பதற்குக் காரணம்-வழமையான எழுத்துகளிலிருந்து மாறுபட்டு பளிச்சிடும் எழுத்து. ஒரே சமயத்தில் பிரமிப்பூட்டும், திகைப்பூட்டும், புரிதலுக்கு அடங்காத வெளியிலிருந்து ஒலிக்கும் எழுத்து. முபீன் சாதிகாவின் திறமையும், சொல்வீச்சும்,பார்வையும் அதன் நேர்மையும் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் கொடை
வாஸந்தி, எழுத்தாளர், இதழாளர்
முபீன் சாதிகா அடிப்படையில் ஒரு கவிஞராக இருப்பதினாலோ என்னவோ அவரது எழுத்துக்களில் இருக்கம் இருக்கிறது. கற்பனை இருக்கிறது. கவிதை இருக்கிறது. அழகியல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சிந்தனை பரிமாணங்களை தருகிற நவீனத்துவமும் இருக்கிறது.
ஞானராஜசேகரன்,திரைப்பட இயக்குநர், முன்னாள்
கவிதைத் தொகுப்புகள், குறுங்கதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் என தமிழில் நவீன இலக்கியம் சார்ந்த படைப்புகளை அண்மைக் காலங்களில் தொடர்ந்து வழங்கி வரும் முபீன் சாதிகா தன்னுடைய படைப்புகளில் பின் நவீனத்துவம் மற்றும் பெண்மைய சிந்தனை சார்ந்த கருத்தாக்கங்களையும் உரையாடல்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர். முக்கியமாக அவர் படைப்புகளில் வெளிப்படும் கற்பனையும், வினோதமும், அதியதார்த்தமும் மிகுந்த புனைவுத்தன்மையுடன் ஈடுபாடுகளை உருவாக்குபவை.
'வெளி' ரெங்கராஜன், எழுத்தாளர், நாடக இயக்குநர்
சித்ரபவுரி - Product Reviews
No reviews available

