செல்பேசி பழுது நீக்குதல் (Cell Phone Service with CD)

செல்பேசி பழுது நீக்குதல் (Cell Phone Service with CD)
ஜெ. வீரநாதன் அவர்கள் எழுதியது.
2009ஆம் ஆண்டு இறுதியில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 45% பேர் மட்டுமே செல்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர் என்று ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. எனினும் இங்கு செல்பேசிகளின் பயன்பாடு என்பது வருடத்திற்கு 20% என்ற அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 100சதவீதத்தை அதாவது 120கோடி எண்ணிக்கையை அது அடைந்துவிடும் என்று தெரிகிறது. இந்தியக் கலாச்சாரத்தின்படி மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் என்பது தொடர்ந்தே வருவதால், பழுதடைந்தாலும் இந்த செல்பேசிகள் உடனடியாகத் தூக்கி எறியப்படுவது இல்லை. ஒரு முறையேனும் பழுது நீக்க தரப்படுகின்றன. அந்த வகையில் செல்பேசி பழுது நீக்குதல் என்பது இந்தியாவில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இதில் சிறப்பாகவும் முழுமையாகவும் பயிற்சி எடுத்துக் கொண்டு பணிபுரிந்தால் நல்ல வளர்ச்சி காணலாம்.