அரண்மனை மியூசியம்
அரண்மனை மியூசியம்
நிகழ்கால நிதர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தனது நேர்மையில், கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பவர்களை, பலர் படாத பாடு படுத்தினாலும், புரிந்து கொள்ளவும் சிலர் இருப்பார்கள். உறவுகளே புரிந்து கொள்ளாத போது, ஊரார் வஞ்சிப்பார்கள் என்பது நிஜமல்ல என்பதை நாவல் உணர்த்தி, நேர்மையாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது.
ஆயிரத்து ஒரு இரவுகள் கதையில் ஒவ்வொரு இரவையும் சாதுர்ய மாகக் கடத்த, நாயகி ஒரு கதை சொல்வாள். அது போன்று, லிஃப்ட் நின்று போய் இரவைக் கழிக்க வேண்டி வரும் சமயத்தில், அதில் சிக்கிக் கொண்ட பெண்கள் உண்மையாக நடந்த சுவாரசியமான வரலாற்று நிகழ்வுகளை தங்களுக்குள் பேசிக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டு இருப்பதை வாசகர்களுக்கு அந்த வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு செல்லும் நாவலாசிரியரின் முயற்சியாகப் பார்க்கலாம்.
நாவலாசிரியர் தாரமங்கலம் வளவனின் படைப்புகள் கணையாழி, கல்கி, தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் வந்து கொண்டிருக் கின்றன.
அரண்மனை மியூசியம் - Product Reviews
No reviews available

