ஆதினி
ஆதினி
பாண்டியர்கள், மதுரை நாயக்க மன்னர்கள், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள், சிவகங்கை மன்னர்கள் ஆகியோரின் வரலாற்றையெல்லாம் அறிந்தவள் இந்த ஆதினி.
காரைக்குடி - தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதிப் புதூர் காட்டில் அமைந்துள்ளது சங்கரபதி கோட்டை. இதன் ஆதிப் பெயர் செம்பொன்மாரி கோட்டை. இந்தக் கோட்டை பல வரலாற்றுத் தடங்களைத் தன்னுள்ளே புதைத்துள்ளது. இந்த நிலத்தின் தொன்மைக்குள் பயணித்து, ஆதினி எனும் முதியவளிடமிருந்து பெற்ற தகவல்களைத் தொகுத்து இந்த வரலாற்றுப் புதினத்தைப் படைத்திருக்கிறார் துரை. அறிவழகன்.
செம்பொன்மாரி நகரத்து மறவர்களின் இனக்குழு வாழ்க்கை முறையும், வீரம் மிக்க நடவடிக்கைகளும், தங்கள் இனத்துக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டவராக உண்மையாக இருந்த தன்மையும் அவர்களை வரலாற்று நாயகர்களாக அடையாளப்படுத்துகின்றன.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற நாவல் இது.
ஆதினி - Product Reviews
No reviews available

