விதி என்ன செய்யும்
விதி என்ன செய்யும்
பண்டித ஜவஹர்லால் நேருவின் முதல் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டை தெரிந்த அளவு இரண்டாவது தங்கை கிருஷ்ணா ஹத்தீசிங்கைப் பலர் அறிந்திலர்.
பண்டித நேருவைவிட 18 வயது இளையவரான கிருஷ்ணா எழுதிய வாழ்க்கை வரலாறே "விதி என்ன செய்யும்?" என்னும் இந்நூல். இளம் வயது ஆனந்தபவன் வாழ்க்கை, தகப்பனாரின் வசதியான வக்கீல் வாழ்க்கை, சிரமமான அரசியல் வாழ்க்கையை கிருஷ்ணா பதிவு செய்துள்ளார். ஆனந்த பவனத்திற்கு வருகை புரிந்த அந்தக்கால பிரபல்யங்களின் சொல்லாடலைக் குழந்தையாகயிருந்த கிருஷ்ணா உன்னிப்பாகக் கவனித்து அதைப் பதிவு செய்துள்ளார். அண்ணி கமலா நேரு, அண்ணன் மகள் இந்திரா காந்தி, அப்பா மோதிலால், அம்மா சொரூப ராணி, பெரியம்மா முதலானோர் பற்றி கிருஷ்ணாவின் பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணாவும், விஜயலட்சுமியும் ஒரே நேரத்தில் சிறையி லிருந்திருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த சக சிறைவாசிப் பெண்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் பெரும்பாலும் பொதுவெளியில் அறியப்படாத தகவல்கள். கிருஷ்ணா ஹத்தீசிங்கின் கண்மூடித்தனமான காதல் அதை அண்ணன் நேருவிடம் விளக்க முயலுதல், மகாத்மா காந்தியின் தலையீடு, நேருவின் இரண்டு தங்கைகளும் குஜராத்திகளை மணந்த சூழல், எல்லாம் படிக்க ரசமானவை.
விதி என்ன செய்யும் - Product Reviews
No reviews available

