ததும்பி வழியும் மௌனம்

0 reviews  

Author: அ.வெண்ணிலா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  420.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ததும்பி வழியும் மௌனம்

ததும்பி வழியும் மௌனம் தூலில் முப்பத்தியெட்டு கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூக வாழ்வை முப்பத்தியெட்டு விதமாக பார்த்திருக்கிறார். விமர்சித்திருக்கிறார் அ.வெண்ணிலா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். குழந்தைகளைப் பற்றி, கல்வி முறை, மருத்துவம், வீடு, சினிமா, நகர்மயம், காட்சி ஊடகங்கள், கிராமம், நவீன வாழ்க்கை, தொழில்நுட்பம், கைவிடப்பட்ட முதியோர்கள், பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நவீன வாழ்க்கை, விளையாட மறந்த குழந்தைகள் என்று சமூகத்திலுள்ள பல விசயங்கள் குறித்து தெளிவாகவும், துல்லியமாகவும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
சமூகத்தை திறந்த மனதோடு பார்த்திருக்கிறார். சமூகத்தைப் பாதித்த, பாதிக்கக்கூடிய அத்தனை விசயங்களையும் பாரபட்சமின்றி எழுதியிருக்கிறார். சில இடங்களில் அன்பாகவும், சில இடங்களில் கோபமாகவும் எழுதியிருக்கிறார். அன்பும், கோபமும் சமூக அக்கறையினால் ஏற்பட்டது.
முப்பத்தியெட்டு கட்டுரையும் உயிரோட்டமான மொழியில், சிடுக்குகளற்ற சரளமான மொழியில் மனதை தெகிழச் செய்யக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தை புரிந்துகொள்வதற்கு காலத்தின் கண்ணாடியாக இருக்கிறது அ.வெண்ணிலா எழுதிய, 'ததும்பி வழியும் மௌனம்
இந்நூல் பற்றி சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. நான் அள்ளியது கைப்பிடி நீர்தான்.
எழுத்தாளர் இமையம்
 

ததும்பி வழியும் மௌனம் - Product Reviews


No reviews available