தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள்
தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள்
தமிழினம் எத்தகைய உயர் பண்புகளைக் கொண்ட, நாகரிக வளர்ச்சி நிறைந்த இனமாக வாழ்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது என்பதை எண்ணிப் பெருமித உணர்வு நமக்கு மேலிடுகிறது. இந்நூல் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானால் நம் தமிழினத்தின் பெருமையை உலகறியும் வாய்ப்பு மேலிடும்.
இன்றைய நடைமுறைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் நடப்பு நிகழ்வுகளோடு ஆங்காங்கே ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பேணிக் காக்க எண்ணும் இவரின் பேரவா இயல்பூக்கமாக இயங்குவதனைக் கண்டறிய முடிகிறது.
நல்ல தமிழ் நடையும் பிழைகளில்லாத மொழிப் பயன்பாடும் இந்நூலை அணி செய்கின்றன. தமிழரின் பண்பாட்டு விழுமியங்களைத் தொகுத்தது போன்று மேலும் பல நூல்களைத் தமிழுலகத்திற்குப் பேரா. முனைவர் வசந்தா ஐயாசாமி அவர்கள் வழங்க வேண்டும்.இவர் கற்று உய்த்துணர்ந்த கல்வி, சமகால உலகிற்கும் எதிர்காலச் சமுதாயத்திற்கும் பெரும் பயன் நல்குவதாக.
தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் - Product Reviews
No reviews available

