சுவருக்குள் சித்திரங்கள்
வீறுகொண்டெழுந்த நக்சல்பாரி இயக்க எழுச்சியில் பங்கேற்று, செயலாற்றி, சிறை சென்று தூக்கு மேடையை எட்டி உதைத்து, ஆயுள் தண்டனைக் கைதியாகி சிறைப்படுத்தப்பட்டவர்களின் உரிமைப் போரில் அடிபட்டு எழுந்த தோழர் தியாகு அவர்கள் அந்த இரத்த சாட்சியத்தை ‘சுவருக்குள் சித்திரங்களாய்’ தீட்டித் தந்துள்ளார்.
சிறைப்படுத்தப்பட்டோர் வரலாற்றைச் சுவையோட கதை மொழியில் எளிமைபட எழுதி இலட்சக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற கதாநாயகர்களை சித்திரங்களாக வரைந்துள்ளார். வரலாற்று நூல் படைப்பாக்கத் தகுதி பெறுவது அரிதுதான். அந்தத் தகுதியை இந்நூல் பெற்றுள்ளது.
பதிப்பகத்தார்