பேராசிரியர் ப.மருதநாயகம் வாழ்வும் பணியும்
பேராசிரியர் ப.மருதநாயகம் வாழ்வும் பணியும்
முனைவர் சு.ஏழுமலை அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், கர்லம்பாக்கம் கிராமத்தில் திரு.சி.நா.சுப்பிரமணி திருமதி.எல்லம்மாள் தம்பதியருக்கு 04.05.1976ஆம் ஆண்டு பிறந்தார். கர்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியையும் நிறைவு செய்தார். இளங்கலைத் தமிழ் இலக்கியத்தைச் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியிலும், முதுகலைத்தமிழ், ஆய்வியல்நிறைஞர், முனைவர் பட்டம் ஆகியவற்றைத் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.
2007ஆம் ஆண்டுமுதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆராய்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் 'இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் மனித மதிப்புகள் (2012) சங்க இலக்கியங்களில் மனித மதிப்புகள் (2015), கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்* (2018) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கலைச்சொல்லகராதி, தமிழக மீளவர் தொழில் பண்பாட்டுச் சொல்லகராதி ஆகிய இரு அகராதிகளின் பதிப்பாசிரியர். இவருடைய பள்ளிப்பட்டு இருளர் பழங்குடி இன மக்களின் வட்டார வழக்குச் சொல்லகராதி என்ற நூல் தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டின் சிறந்த நூலிற்கான பரிசு பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு இவருக்கு 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல்' விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
பேராசிரியர் ப.மருதநாயகம் வாழ்வும் பணியும் - Product Reviews
No reviews available

