பெரியபுராணம் ஓர் ஆய்வு
பெரியபுராணம் ஓர் ஆய்வு
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம்
சுந்தரரின் திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு அறுபத்து மூன்று அடியார்களின் வரலாற்றைக் கூறுவதே பெரியபுராணம். இந்நூலைத் தமிழுலகிற்கு வழங்கியவர் சேக்கிழார். இந்நூல் எழுந்த காலச்சூழல் என்ன என்பதை ஆயும் வகையிலும், பெரிய புராண நூலின் சிறப்புகளை ஆயும் வகையிலும் இந்த ஆய்வு நூல் அமைந்துள்ளது.
'பிள்ளை பாதி புராணம் பாதி என்பதற்கேற்ப நூலில் அறுபத்து நான்கு நாயன்மார்களின் வரலாறு கூறப்பட்டாலும், அதில் மிகுதியாக சம்பந்தரைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ஆய்ந்துரைப்பதாகவும், சம்பந்தர் தம் பாடல்களில் தம் பெயரைத் தமிழோடு இணைத்தே கூறிக் கொள்வது ஏன் என்பது பற்றியுமாக, பெரிய புராணம் எழுந்த காலச் சூழலை ஆய்ந்துரைக்கிறது நூலின் முதல் பகதி, பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும், நூல் அமைப்பு குறித்தும், சேக்கிழாரின் படைப்பாற்றல் பற்றியும் ஆய்கிறது நூலின் அடுத்த பகுதி. இந்நூலை நுட்பமாக ஆய்ந்து உரைத்துள்ளவர். அ.ச. ஞானசம்பந்தன் தமிழறிஞரும், எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான இவர், பெரிய புராணத்தை வேறு யாரும் அணுகாத கோணத்தில் அணுகி, பல புதிய சிந்தனைகளை விதைத்துச் சென்றுள்ளார். இந்த அரிய நூலை எமது பதிப்பகம் வழி வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
தமிழிலக்கியம், சமயம், தத்துவம், வரலாறு, ஒப்பிலக்கியம் எனப் பல துறைகளில் நின்று. ஆழ்ந்த கருத்துகளுடன் ஆய்வுக்கான சிந்தனைகளையும் கூறிச் செல்லும் இந்நூலை அனைவரும் படித்துப் பயன்பெற விழைகிறோம்.
பெரியபுராணம் ஓர் ஆய்வு - Product Reviews
No reviews available

